தற்போது பல ஹோட்டல்களில் நின்று கொண்டே தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இன்றைய அவசர உலகில் நம்மால் பொறுமையாக உட்கார்ந்து எதையும் சாப்பிடும் நிலைமையில் இல்லை. எதற்கு எடுத்தாலும் அவசரம், எதிலும் அவசரம் தான். வாழ்வதற்காக நாம் உழைக்கலாம். ஆனால் வெறுமனே உழைத்து என்ன பயன். உழைப்பதற்கும், வாழ்வதற்கும் உயிர் வேண்டுமல்லவா? உயிர் வாழ வேண்டுமானால், உண்ணும் உணவுகளால் நல்ல பலன் நமக்கு கிடைக்க வேண்டும். அதற்கு அமர்ந்து நிதானமாக நன்கு மென்று உணவை விழுங்க வேண்டும்.
உணவை உண்ணும் போது நின்று கொண்டே சாப்பிடுவது என்பது ஒரு கெட்ட பழக்கம். இப்பழக்கம் உங்களிடம் இருப்பின் அதை உடனே மாற்றுங்கள். எப்படி தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாதோ, அதேப் போல் தான் உணவு உண்ணும் போதும் நின்று கொண்டு உண்ணக்கூடாது. அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
MOST READ: தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?
இக்கட்டுரையில் ஒருவர் உணவை நின்று கொண்டு சாப்பிட்டால் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, உடனே அப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.